Friday, August 23, 2013

கீச்சு-aug23

தானாக பட்டுத் திருந்தும் வரை, “அனுபவம் என்பது எல்லோருக்கும் வெறும் வார்த்தை மட்டுமே.

நீ தோள் சாய்த்துக் கொள்ள இருக்கிறாய் என்பதினாலேயே,
கவலைகள் எனக்கு கணமாக தெரிவதில்லை.

உன்மத்தம் பிடிக்கச் செய்து விடுகிறது,
உன் முத்தம்..

உன் ப்ரியசகியாகிட வேண்டி,
உன் ப்ரியம் கேட்கும் யாசகி

எவ்வித எதிர்பார்ப்புமின்றி, 
என் கோபம் தாங்கிக் கொள்ள, 
என் பிடிவாதம் தணித்து விட, 
என்னை நானாக நேசிக்க, 
ஆகச்சிறந்த அடிமை ஒன்று தேவை.

சில உறவுகளை இழக்கும் போது தான்,
வாழ்க்கை முழுமைக்குமான பாடம் புரிகிறது,
சில நேரங்களில், வாழ்க்கையே புரிந்துவிடுகிறது..

என்ன சொல்லி பேச, என யோசித்து சொல்லும் 
"ஒற்றை “ஹாய்-ல் , அந்நியப்பட்டு போகிறோம், 
நீயும்,நானும்!

விவஸ்தையற்ற அவஸ்தைகளை தரும்,அக்கணத்தில் உன் ஆளுமையை மிக அதிகமாக ரசிக்கிறேன்!

நல்லவன் என்ற பெயரோடு, அடுத்தவர்களுக்காக வாழ்வதை காட்டிலும்; 
கெட்டவன் என்ற பெயரோடு, தனக்காக வாழ்வது சாலச் சிறந்தது!

தூக்கமற்ற இரவுகளும், பாரமான மனமும், 
உனக்கான என் இழப்புகளின் மீட்சியாய், 
இன்னும் இன்னும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

மெளனம் -- சம்மதத்தின் அறிகுறி மட்டுமல்ல... 
சங்கடத்தின் மறுமொழியும் கூட.

உனக்கும் எனக்குமான உறவை கொன்று விட்டேன்...
உன் மீதான பெயரிடாத என் உணர்வுகளை என்ன செய்ய…

எதிர்படும் ஒவ்வொருவரிடமும் கற்றுக்கொள்ள, ஏதாவது ஒன்று இருந்து கொண்டே தான் இருக்கிறது..

நீ காயப்படுத்துவதை கூட, என் பித்து மனம்
ஞாயப்படுத்தியே பார்க்கிறது!!

நீ தோள் சாய்த்துக் கொள்ள இருக்கிறாய் என்பதினாலேயே,
கவலைகள் எனக்கு கணமாக தெரிவதில்லை.

சுள்ளென அடிக்கும் வெயிலின் நடுவே
வந்து போகும் சாரல்,
நம் ஊடலின் நடுவே ,
நீ கேட்கும் ,
 “சாப்பிட்டியா?”-வை, நினைவுப்படுத்திப் போகிறது

No comments:

Post a Comment