DAY--2:
முதல் நாள் அனுபத்தின் காரணமாக , மறுநாள் நானே பாஸ் எடுத்துக்கொண்டேன்.
கண்டக்டர் பாஸ் - உடன் ஒரு 5 ரூபாய் டிக்கெட்டும் குடுத்தார் , நானும் திருமலை பிராசாதம் போல் பவ்யமாய் வாங்கி ஹேண்ட் பேக்கில் பத்திரப்படுத்திக் கொண்டேன்.
ரெண்டாவது பஸ் மாறி இறங்கும் வரை எந்த வில்லங்கமுமில்லை.
பனஸ்வாடி ஸ்டாப்-பில் இறங்கி ரோடு க்ராஸ் செய்து அடுத்த பஸ்-க்காக காத்திருந்தோம்.
வந்த ரெண்டு, மூனு பஸ்ஸையும் கலர் சரியில்லை , சீட் இல்ல போன்ற முக்கிய காரணங்களுக்காக நிராகரித்து விட்டு ஏகமனதாக ஒரு பஸ்ஸில் ஏறினோம்.
கண்டக்டர் வந்து டிக்கெட் கேட்டதும், பாஸை எடுத்து நானே ஒரு முறை சரி பார்த்து விட்டு காண்பித்தேன்.
அவர் கன்னடத்தில் எதோ கேட்டு விட்டு நகர்ந்து விட்டார்.
என்ன சொல்றாரு இந்த ஆளு ? என நான் எனக்குள்ளே கேட்டுக் கொண்டு திரும்பி விட்டேன்.
மறுபடியும் கண்டக்டர் வந்து , ஏதோ கேட்க , என் காதில் "ஐ.டி கார்டு இதியா ?" என விழுந்தது.
ஐ.டி கார்டா ? ஙே ...............
#BMTC பஸ்சில் இப்டியெல்லாம் செக் பண்றங்காளா, பரவாயில்லையே என மனமார BMTC யைப் பாராட்டினேன்#
உடனே கர்மசிரத்தையாக , என் பர்ஸை திறந்து அதிலிருந்து PAN கார்டை கையில் எடுத்து விட்டு நிமிர்ந்தால் , அதற்குள் கண்டக்டர் நகர்ந்திருந்தார்.
சரி அவர் வந்ததும் காட்டுவோம் என்று திரும்பிய வினாடியில் , என் மெடுல்லா ஆப்லங்கட்டாவில் ஒரு மின்னல் அடித்தது.
எதுக்காக கண்டக்டர் ஐ.டி கார்டெல்லாம் கேட்கிறார் என்று யோசித்து , அவர் கேட்டதை அப்பிடியே ஸ்லோ மோஷனில் ரீவைண்ட் பண்ணிப்பார்த்தேன்.
கண்டக்டர் கேட்டது இது தான் “ ஐது ரூபாய் டிக்கெட் இதியா ?”
சட்டென என் பாஸைப் பார்த்தேன். 45 ரூபாய் என அச்சிட்டிருந்தது. முதல் நாள் வாங்கிய பாஸில் 50 ரூபாய் போட்டிருந்தது.
அப்போது தான் என் மர மண்டையில் 1000 வாட்ஸ் பல்ப் ஒன்று எரிந்து எனக்கு ,புரிய வைத்தது, பாஸ் 45 ரூபாய் மதிப்புடையதால் , எக்ஸ்ட்ரா 5 ரூபாய் டிக்கெட்டும் சேர்த்து தான் குடுத்திருக்கிறார்கள்.
அந்த டிக்கெட் இல்லாமல் நான் 45 ரூபாய் பாஸ் மட்டும் காட்டியதால், இந்த 5 ரூபாய் டிக்கெட்டை தான் கண்டக்டர் கேட்டிருக்கிறார்.
அப்படியே யாரவது என் முகத்தை ஃபோட்டோ எடுத்திருக்க வேண்டுமே ... ஹ்ம்ம்ம் குடம் குடமாய் அசடு வழிந்து கொண்டிருந்தது.
நல்ல வேளை , அவரிடம் PAN கார்டை காட்டாமல் 5 ரூபாய் டிக்கெட்டை காட்டிவிட்டு , சுற்றும்முற்றும் யாரும் என்னை கவனிககவில்லை என்பதை உறுதிப்படுத்திவிட்டு என் புத்திசாலித்தனத்தை நினைத்து நினைத்து சிரித்துக் கொண்டேண்.
இருந்தாலும் , ”இந்தியாவிலேயே பஸ் கண்டக்டரிடம் , பான் கார்டை வெரிஃபிகேசனுக்கு காட்டிய முதல் குடிமகள்” என்ற பட்டத்தை மிஸ் பண்ணியதில் சற்று மன வருத்தம் தான்”..
பயணம் தொடரும்.....
முதல் நாள் அனுபத்தின் காரணமாக , மறுநாள் நானே பாஸ் எடுத்துக்கொண்டேன்.
கண்டக்டர் பாஸ் - உடன் ஒரு 5 ரூபாய் டிக்கெட்டும் குடுத்தார் , நானும் திருமலை பிராசாதம் போல் பவ்யமாய் வாங்கி ஹேண்ட் பேக்கில் பத்திரப்படுத்திக் கொண்டேன்.
ரெண்டாவது பஸ் மாறி இறங்கும் வரை எந்த வில்லங்கமுமில்லை.
பனஸ்வாடி ஸ்டாப்-பில் இறங்கி ரோடு க்ராஸ் செய்து அடுத்த பஸ்-க்காக காத்திருந்தோம்.
வந்த ரெண்டு, மூனு பஸ்ஸையும் கலர் சரியில்லை , சீட் இல்ல போன்ற முக்கிய காரணங்களுக்காக நிராகரித்து விட்டு ஏகமனதாக ஒரு பஸ்ஸில் ஏறினோம்.
கண்டக்டர் வந்து டிக்கெட் கேட்டதும், பாஸை எடுத்து நானே ஒரு முறை சரி பார்த்து விட்டு காண்பித்தேன்.
அவர் கன்னடத்தில் எதோ கேட்டு விட்டு நகர்ந்து விட்டார்.
என்ன சொல்றாரு இந்த ஆளு ? என நான் எனக்குள்ளே கேட்டுக் கொண்டு திரும்பி விட்டேன்.
மறுபடியும் கண்டக்டர் வந்து , ஏதோ கேட்க , என் காதில் "ஐ.டி கார்டு இதியா ?" என விழுந்தது.
ஐ.டி கார்டா ? ஙே ...............
#BMTC பஸ்சில் இப்டியெல்லாம் செக் பண்றங்காளா, பரவாயில்லையே என மனமார BMTC யைப் பாராட்டினேன்#
உடனே கர்மசிரத்தையாக , என் பர்ஸை திறந்து அதிலிருந்து PAN கார்டை கையில் எடுத்து விட்டு நிமிர்ந்தால் , அதற்குள் கண்டக்டர் நகர்ந்திருந்தார்.
சரி அவர் வந்ததும் காட்டுவோம் என்று திரும்பிய வினாடியில் , என் மெடுல்லா ஆப்லங்கட்டாவில் ஒரு மின்னல் அடித்தது.
எதுக்காக கண்டக்டர் ஐ.டி கார்டெல்லாம் கேட்கிறார் என்று யோசித்து , அவர் கேட்டதை அப்பிடியே ஸ்லோ மோஷனில் ரீவைண்ட் பண்ணிப்பார்த்தேன்.
கண்டக்டர் கேட்டது இது தான் “ ஐது ரூபாய் டிக்கெட் இதியா ?”
சட்டென என் பாஸைப் பார்த்தேன். 45 ரூபாய் என அச்சிட்டிருந்தது. முதல் நாள் வாங்கிய பாஸில் 50 ரூபாய் போட்டிருந்தது.
அப்போது தான் என் மர மண்டையில் 1000 வாட்ஸ் பல்ப் ஒன்று எரிந்து எனக்கு ,புரிய வைத்தது, பாஸ் 45 ரூபாய் மதிப்புடையதால் , எக்ஸ்ட்ரா 5 ரூபாய் டிக்கெட்டும் சேர்த்து தான் குடுத்திருக்கிறார்கள்.
அந்த டிக்கெட் இல்லாமல் நான் 45 ரூபாய் பாஸ் மட்டும் காட்டியதால், இந்த 5 ரூபாய் டிக்கெட்டை தான் கண்டக்டர் கேட்டிருக்கிறார்.
அப்படியே யாரவது என் முகத்தை ஃபோட்டோ எடுத்திருக்க வேண்டுமே ... ஹ்ம்ம்ம் குடம் குடமாய் அசடு வழிந்து கொண்டிருந்தது.
நல்ல வேளை , அவரிடம் PAN கார்டை காட்டாமல் 5 ரூபாய் டிக்கெட்டை காட்டிவிட்டு , சுற்றும்முற்றும் யாரும் என்னை கவனிககவில்லை என்பதை உறுதிப்படுத்திவிட்டு என் புத்திசாலித்தனத்தை நினைத்து நினைத்து சிரித்துக் கொண்டேண்.
இருந்தாலும் , ”இந்தியாவிலேயே பஸ் கண்டக்டரிடம் , பான் கார்டை வெரிஃபிகேசனுக்கு காட்டிய முதல் குடிமகள்” என்ற பட்டத்தை மிஸ் பண்ணியதில் சற்று மன வருத்தம் தான்”..
பயணம் தொடரும்.....