Tuesday, September 17, 2013

BMTC--Day2

DAY--2:

முதல் நாள் அனுபத்தின் காரணமாக , மறுநாள் நானே பாஸ் எடுத்துக்கொண்டேன்.

கண்டக்டர் பாஸ் - உடன் ஒரு 5 ரூபாய் டிக்கெட்டும் குடுத்தார் , நானும் திருமலை பிராசாதம் போல் பவ்யமாய் வாங்கி ஹேண்ட் பேக்கில் பத்திரப்படுத்திக் கொண்டேன்.

ரெண்டாவது பஸ் மாறி இறங்கும் வரை எந்த வில்லங்கமுமில்லை.

பனஸ்வாடி ஸ்டாப்-பில் இறங்கி ரோடு க்ராஸ் செய்து அடுத்த பஸ்-க்காக காத்திருந்தோம்.

வந்த ரெண்டு, மூனு பஸ்ஸையும் கலர் சரியில்லை , சீட் இல்ல போன்ற முக்கிய காரணங்களுக்காக நிராகரித்து விட்டு ஏகமனதாக ஒரு பஸ்ஸில் ஏறினோம்.

கண்டக்டர் வந்து டிக்கெட் கேட்டதும், பாஸை எடுத்து நானே ஒரு முறை சரி பார்த்து விட்டு காண்பித்தேன்.

அவர் கன்னடத்தில் எதோ கேட்டு விட்டு நகர்ந்து விட்டார்.

என்ன சொல்றாரு இந்த ஆளு ? என நான் எனக்குள்ளே கேட்டுக் கொண்டு திரும்பி விட்டேன்.

மறுபடியும் கண்டக்டர் வந்து , ஏதோ கேட்க , என் காதில் "ஐ.டி கார்டு இதியா ?" என விழுந்தது.

ஐ.டி கார்டா ? ஙே ...............

#BMTC பஸ்சில் இப்டியெல்லாம் செக் பண்றங்காளா, பரவாயில்லையே என மனமார BMTC யைப் பாராட்டினேன்#

உடனே கர்மசிரத்தையாக , என் பர்ஸை திறந்து அதிலிருந்து PAN கார்டை கையில் எடுத்து விட்டு நிமிர்ந்தால் , அதற்குள் கண்டக்டர் நகர்ந்திருந்தார்.

சரி அவர் வந்ததும் காட்டுவோம் என்று திரும்பிய வினாடியில் , என் மெடுல்லா ஆப்லங்கட்டாவில் ஒரு மின்னல் அடித்தது.

எதுக்காக கண்டக்டர் ஐ.டி கார்டெல்லாம் கேட்கிறார் என்று யோசித்து , அவர் கேட்டதை அப்பிடியே ஸ்லோ மோஷனில் ரீவைண்ட் பண்ணிப்பார்த்தேன்.
கண்டக்டர் கேட்டது இது தான் “ ஐது ரூபாய் டிக்கெட் இதியா ?”

சட்டென என் பாஸைப் பார்த்தேன். 45 ரூபாய் என அச்சிட்டிருந்தது. முதல் நாள் வாங்கிய பாஸில் 50 ரூபாய் போட்டிருந்தது.

அப்போது தான் என் மர மண்டையில் 1000 வாட்ஸ் பல்ப் ஒன்று எரிந்து எனக்கு ,புரிய வைத்தது, பாஸ் 45 ரூபாய் மதிப்புடையதால் , எக்ஸ்ட்ரா 5 ரூபாய் டிக்கெட்டும் சேர்த்து தான் குடுத்திருக்கிறார்கள்.

அந்த டிக்கெட் இல்லாமல் நான் 45 ரூபாய் பாஸ் மட்டும் காட்டியதால், இந்த 5 ரூபாய் டிக்கெட்டை தான் கண்டக்டர் கேட்டிருக்கிறார்.

அப்படியே யாரவது என் முகத்தை ஃபோட்டோ எடுத்திருக்க வேண்டுமே ... ஹ்ம்ம்ம் குடம் குடமாய் அசடு வழிந்து கொண்டிருந்தது.

நல்ல வேளை , அவரிடம் PAN கார்டை காட்டாமல் 5 ரூபாய் டிக்கெட்டை காட்டிவிட்டு , சுற்றும்முற்றும் யாரும் என்னை கவனிககவில்லை என்பதை உறுதிப்படுத்திவிட்டு என் புத்திசாலித்தனத்தை நினைத்து நினைத்து சிரித்துக் கொண்டேண்.

இருந்தாலும் , ”இந்தியாவிலேயே பஸ் கண்டக்டரிடம் , பான் கார்டை வெரிஃபிகேசனுக்கு காட்டிய முதல் குடிமகள்” என்ற பட்டத்தை மிஸ் பண்ணியதில் சற்று மன வருத்தம் தான்”..

பயணம் தொடரும்.....

BMTC- அனுபவம்

ஐ.டி ஆதிக்கதில் இருக்கும் பெங்களூர் வாசத்தில் 3 ஆண்டுகள் ஓடி விட்டது.
இந்த 3 வருடத்தில் தங்கியிருக்கும் ரூம், ஆபிஸ் & பஸ் ஸ்டாண்ட் , இதைத் தவிர வேறு எந்த இடங்களுக்கும் என் கண்களும், கால்களும் பழக்கப்பட்டதில்லை .
(அம்புட்டு நல்லவளா நீ ...னு கேட்கறிங்களா .. அதெல்லாம் இல்லை ...அவ்வளவு சோம்பேறித்தனம் ...)
இந்த ஹைடெக் சிட்டியின் அடையாளமான டிராஃபிக் & பொல்யூசனுக்கு நான் மட்டும் விதிவிலக்கா..
கேரியர் டெவலப்மெண்ட் என்ற பெயரில் , LINUX கத்துக்க ஒரு இன்ஸ்டிடியுசனில் ஜாயின் பண்ணினேன்.
அப்ப கூட அந்த கோர்ஸ் பத்தி எதாவது விசாரிக்கவோ, ஏன் ஃபீஸ் கட்டவோ கூட நான் அந்த ஏரியா பக்கம் தலைகாட்டவில்லை.
எல்லாம் என் சக நண்பன் சிவா தான் செய்தான்.

அன்று தான் எனக்கும் BMTC பஸ் கண்டக்டர்-களுக்கும் இருக்கும் ஏழாம் பொருத்தம் எனக்கு புரிய ஆரம்பித்தது....

DAY--1

ஓரு வழியாக முதல் நாள் க்ளாஸ்-க்கு கிளம்பி,ரூமிலிருந்து நானும்,என் நண்பர் குழாமும் (சிவா & நந்தா) பேசிக்கொண்டே பஸ் ஸ்டாப் வந்து சேர்ந்தோம்.
மனதிற்குள் ஒரு புதிய இடத்திற்கு போகிறோம் என்ற சிறு குழந்தையின் துள்ளல்.
பஸ்-க்கு காத்திருக்கும் இந்த இடைப்பட்ட நேரத்தில் உலக நடப்புகளை அலசி ஆரய்ந்து, இந்த் வருட பட்ஜெட்டை விமர்சித்து விட்டு, யார் டிக்கெட் எடுப்பது என்ற அதி முக்கியமான விசயத்தை மறந்து விட்டோம்.
பஸ்ஸில் ஏறிய பின், மொழி படத்தில் வருவது போல் நான் இந்த பக்கமும் , அவர்கள் அந்த பக்கமும் நின்று சைகை செய்து, இறுதியாக அவர்களே டிக்கெட் எடுப்பது என்று முடிவானது.

3 பஸ் ஏறி, மாற வேண்டியிருந்ததால் டெய்லி பாஸ் வாங்கி, சிவா அதை காட்ட , நான் “நண்பேண்டா” என்ற ரீதியில் நன்றி கலந்த லுக் விட்டு திரும்பினேன்.

ஜன்னல் வழியே ஹாயாக பராக் பார்த்துக் கொண்டு வந்தேன்.

அடுத்த ஸ்டாப்பில் இறங்கி கவனமாக சிவா-விடமிருந்து டெய்லி பாஸை வாங்கி வைத்துக் கொண்டேன்.

#முன் ஜாக்கிரதை#

மூவரும் அடுத்த பஸ் ஸ்டாப்பிற்கு போய்க்கொண்டிருந்தோம்.வழியில் எதிர்படுவோரையெல்லாம் எந்த வித பாகுபாடிமின்றி கலாய்த்துக்கொண்டே அடுத்த பஸ்ஸில் ஏறினோம். பஸ் ஏறியதும்,
தமிழினத்திற்கே உரிய ஆர்வமாய்(அவசரமாய்) சீட் பிடித்து , வெயில் படாமல் நன்றாக செட்டில் ஆகி விட்டேன். கண்டக்டர் வந்து டிக்கெட் கேட்டதும், (இல்லாத காலரை தூக்கி விட்டுக் கொண்டேன் மனதிற்குள், என் முன் ஜாக்கிரதையை நினைத்து..) கெத்தாக ”பாஸ்” என்றேன்.அவர் சென்று விட்டார்.

பட்டிக்காட்டான் மிட்டாய் கடையைப் பார்ப்பது போல் என்ற பழமொழி ஏனோ மனதில் வந்து சென்றது.அடுத்த அரை மணி நேரத்தில் ஸ்டாப் வந்தது.இறங்கி ரோடு கிராஸ் செய்து அடுத்த பஸ்சை பிடிக்க வேண்டும்.அங்கு தான் எனக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது.

அங்கு பஸ்ஸில் ஏறியதும் அதே ஆர்வமாய் சீட் பிடித்து அமர்ந்த்து தான், தாமதம் .. கண்டக்டர் வந்து டிக்கெட் என்றார்.
நான் பாஸை எடுத்து அதே கெத்தாக காட்டினேன். அவரோ கன்னடத்தில் ஏதோ கேட்க , நான் விழித்தேன் ..

அவர் பேசியதில் எனக்கு தெரிந்த அறைகுறை கன்னடமும் மறந்தது.

திருதிருவென நான் விழிப்பதை பார்த்து அவரே விளக்கினார்.

ஏன் ஆண்களுக்கான பாஸை வைத்திருக்காய் என்பது தான் அவரது கேள்வி..

அப்போது தான் எனக்கு தெரிந்தது பாஸில் பெண்ணின் பொம்மை போட்டிருக்கும் இடத்தில் பன்ச் செய்திருக்க வேண்டுமென.. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

சிவா தான் பாஸ் வாங்கியதால் , கண்டக்டர் ஆண்களுக்கான பாஸை கொடுத்திருக்கிறார்.

இந்த பாஸ் செல்லாது, டிக்கெட் எடுங்க, அமைதியா வேற டிக்கெட் வாங்கிவிட்டேன் ...

பஸ்ஸை விட்டு இறங்கியதும் , சிவவும் நந்தாவும் என்ன விசயமென்று விசாரிக்க , நான் விவரித்தேன்.

உடனே நந்தா எங்க ரெண்டு பேரையும் பார்த்து , இதிலிருந்து என்ன தெரியுது? என்றார்.

நான் வேகமாக அந்த பாஸை நல்லா திருப்பி பார்த்துட்டு , அப்பாவியாய் ஒன்னும் தெரியலயே என்றேன்.

அப்போது தான் நந்தா தன்னுடைய தத்துவம் நம்பர் - 10002 -யை சொன்னார் , “யார் எது குடுத்தாலும் , அப்பிடியே வாங்கி வைக்க கூடாது”
நானும்,சிவாவும் , க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்……….