வறண்ட பாலைவனத்தில்,
கானல் நீர் தேடி பயணித்திருந்தேன்.
வழிப்போக்கனாக அறிமுகம் ஆனாய்;
உன் அறிமுகம் என் முதல் வரம்.
தரிசான என் வாழ்க்கையை,பரிசாக மாற்றினாய்,
வழித்துணையாக என் பயணத்தில் இணைந்தாய்,
வாழ்க்கை இதுவென புரிய வைத்தாய்.
என்னுள் ஒளிந்திருந்த என் ரசனைகளை வெளிக்கொணர்ந்தாய்;
என்னை நானே ரசிக்க வைத்தாய்.
கானல் நீர் தேடலில்
காலம் கரைவதை கண்ணியமாய் உணர்த்தினாய்.
கையில் கிடைத்த பொக்கிஷத்தை,
கடலில் வீசி காயப்படுத்தினேன்;
கலங்காமல் நின்றாய்.
உடைத்து நொறுக்கினேன் உன் இதயத்தை;
வார்த்தைகளால் உன்னை ரணப்படுத்திவிட்டு,
வலிக்கிறதா என்றேன்;
இல்லை காதல் இருக்கிறது என்றாய்.
கண்கள் பனித்து விட்டேன்!
நீ என் வாழ்வில் வந்த காரணம் புரிந்து கொண்டேன்.
ஒரு இலையுதிர் காலத்தின் இளவெயில் நேரத்தில்;
மெல்லிய சாரலுடன்,
மெய் மறக்கும் இசையில்,
வாழ்க்கைத்துணையாய் மாறியிருந்தாய்!
ஆம்! வழிப்போக்கனாக வந்து,
வழித்துணையாய் இணைந்து,
வாழ்க்கைத் துணையாய் நிலைத்து நின்றாய்!
எந்தவொரு கொண்டாட்டங்களிலும்
பெரிதாய் ஈடுபாடு இருந்ததில்லை எனக்கு;
உன்னை எனக்கு கொடுத்த உறவு காதல் ஆகி போனதால்,
சந்தோசத்துடன் நானும் கொண்டாடுகிறேன், காதலர் தினத்தை.
என்றென்றும் காதலுடன்
திவி
கானல் நீர் தேடி பயணித்திருந்தேன்.
வழிப்போக்கனாக அறிமுகம் ஆனாய்;
உன் அறிமுகம் என் முதல் வரம்.
தரிசான என் வாழ்க்கையை,பரிசாக மாற்றினாய்,
வழித்துணையாக என் பயணத்தில் இணைந்தாய்,
வாழ்க்கை இதுவென புரிய வைத்தாய்.
என்னுள் ஒளிந்திருந்த என் ரசனைகளை வெளிக்கொணர்ந்தாய்;
என்னை நானே ரசிக்க வைத்தாய்.
கானல் நீர் தேடலில்
காலம் கரைவதை கண்ணியமாய் உணர்த்தினாய்.
கையில் கிடைத்த பொக்கிஷத்தை,
கடலில் வீசி காயப்படுத்தினேன்;
கலங்காமல் நின்றாய்.
உடைத்து நொறுக்கினேன் உன் இதயத்தை;
வார்த்தைகளால் உன்னை ரணப்படுத்திவிட்டு,
வலிக்கிறதா என்றேன்;
இல்லை காதல் இருக்கிறது என்றாய்.
கண்கள் பனித்து விட்டேன்!
நீ என் வாழ்வில் வந்த காரணம் புரிந்து கொண்டேன்.
ஒரு இலையுதிர் காலத்தின் இளவெயில் நேரத்தில்;
மெல்லிய சாரலுடன்,
மெய் மறக்கும் இசையில்,
வாழ்க்கைத்துணையாய் மாறியிருந்தாய்!
ஆம்! வழிப்போக்கனாக வந்து,
வழித்துணையாய் இணைந்து,
வாழ்க்கைத் துணையாய் நிலைத்து நின்றாய்!
எந்தவொரு கொண்டாட்டங்களிலும்
பெரிதாய் ஈடுபாடு இருந்ததில்லை எனக்கு;
உன்னை எனக்கு கொடுத்த உறவு காதல் ஆகி போனதால்,
சந்தோசத்துடன் நானும் கொண்டாடுகிறேன், காதலர் தினத்தை.
என்றென்றும் காதலுடன்
திவி
No comments:
Post a Comment