நீயும் ஒரு ரிஷியா?
எனக்கு இத்தனை உருமாற்றங்கள் தர உன்னால் மட்டுமே முடிகிறது...
உன் பரிதாப பார்வையில்,
நான் வயதை மறந்து சிறு குழந்தையாகிறேன்...
உன் கடைக்கண் பார்வையில்,
என் இளமை உணர்ந்து இளைஞனாகிறேன்...
நீ பார்க்காமல் போய் விடும் கணங்களில்,
சுய நினைவற்ற வயோதிகனாகிறேன்..
ஆனாலும் இன்னும் காத்திருக்கிறேன்;
உன் காதல் பார்வை பட்டு,
நான் கடவுளாகும் அந்த ஒரு தருணத்திற்காக...
"நீ பார்க்காமல் போய் விடும் கணங்களில்,
ReplyDeleteசுய நினைவற்று வயோதிகனாகிறேன்...???"
வயோதிகர்கள் சுயநினைவற்றவர்களா..??/