Monday, June 17, 2013

மரமாகுமோ மனம்...



நான் விலகி போகிறேன் என்பதன் அர்த்தம்,

நீ என்னை காயப்படுத்திக் கொண்டே இருக்கலாம் என்பதல்ல,

என் உணர்வுகளை உனக்கு புரியவைக்க நினைத்தே, 

என் முயற்சிகளின் மூச்சை நிறுத்திக் கொண்டிருக்கிறேன்..

என்னை ரணப்படுத்தி ரசிப்பதே வழக்கமானது உனக்கு,

காயம் மறந்து, கண்ணீர் துறந்து மீள முயல்வதே வாடிக்கையானது எனக்கு..

நேசித்த ஒரே காரணத்திற்காக , நித்தமும் உன் நலம் நாடுகிறேன்...

நீயோ உன் வார்த்தைகளால் என் சித்தம் கலங்கச் செய்கிறாய்...

யாருமற்ற கானகத்தில்,

மயானத்தின் மையிருள் பூசிய தனிமையில்,

உன்னையோ, உன் நலத்தையோ நினைக்கவில்லை நான்..

என்னை நானாய் மதிப்பவர்கள் மத்தியில்,

என்னை நேசிப்பவர்கள் அரவணைப்பில்,

உனக்காய் பரிதாபப்படுகிறேன்..

எக்கேடொ கெட்டுப் போ, என உதறிச் செல்ல

எத்தனையோ முறை எத்தனித்தும் முயலவில்லை என்னால்..

ஏனெனில் என் மனம் இன்னும் மரமாகவில்லை;

மனிதர்களை நேசிப்பதை நிறுத்தவில்லை !

No comments:

Post a Comment