Wednesday, July 3, 2013

நின் நினைவு

தூக்கமற்ற இரவுகளும்,

பாரமான மனமும்,

உனக்கான என் இழப்புகளின் மீட்சியாய்,

இன்னும் இன்னும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது!

நீயெனும் ஆழிப்பேரலை, என்னை விழுங்கும் போதெல்லாம்

நிதானித்து வெளியிடும் பெருமூச்சுகளோடு,

என் மனதை அழுத்திக் கொண்டிருக்கும்

உன் நினைவையும் வெளியேற்ற முயற்சித்து தோற்றுப் போகிறேன்.

தடதடவென கலவரக்காரர்கள் கடந்து போன

குறுகலானதொரு தெருவை,

அதிர்ச்சி மீளாமல் பார்க்கும் குழந்தையைப் போல்

நம் நாட்களை நினைத்துப் பார்க்கிறது என் மனது!

No comments:

Post a Comment