காடு மேடு கடந்தாலும்,
கடைசியில் கடலில் கலக்கும்
நதியைப் போல்,
எங்கெங்கும் நிறைந்தாலும்,
மூங்கிலோடு கலந்து இசையாகும்,
காற்றைப் போல்,
நட்சத்திரங்களிடையே தனித்திருந்து,
இரவோடு இணையும்,
நிலவைப் போல்,
சிறு சிறு மோதல்களினால்,
உன்னை விட்டு நீங்கினால்,
இந்த ஜீவன் வேறு எங்கே போகும் ?
உன் உள்ளம் தவிர வேறிடம், நானறியேன் !!!
No comments:
Post a Comment