கவிதையும் கனவும் மட்டுமே காதல் அல்ல -- என்று
மீண்டும் ஒருமுறை புரிய வைத்தாய்..
உனக்கும் எனக்குமான, நம் நினைவுகளில் மூழ்கிடும் போது,
திடுமென உணர்கிறேன் --- அது வெறும் நினைவு மட்டுமே என்று..
உயிரில்லாத உறவுகளில் உணர்வுக்கு மட்டும் என்ன மதிப்பு ?
விழி திறக்கும் முதல் நொடியில் இருந்து,
ஊரடங்கி, உறக்கம் தேடும் அந்த நொடி வரை
திரும்பும் எங்கெங்கும் உன் பிம்பமே!
முப்பொழுதும் உனக்கென உருகி,
எப்பொழுதும் எனக்கென வாழ மறந்தேன்!!!
மீண்டும் ஒருமுறை புரிய வைத்தாய்..
உனக்கும் எனக்குமான, நம் நினைவுகளில் மூழ்கிடும் போது,
திடுமென உணர்கிறேன் --- அது வெறும் நினைவு மட்டுமே என்று..
உயிரில்லாத உறவுகளில் உணர்வுக்கு மட்டும் என்ன மதிப்பு ?
விழி திறக்கும் முதல் நொடியில் இருந்து,
ஊரடங்கி, உறக்கம் தேடும் அந்த நொடி வரை
திரும்பும் எங்கெங்கும் உன் பிம்பமே!
முப்பொழுதும் உனக்கென உருகி,
எப்பொழுதும் எனக்கென வாழ மறந்தேன்!!!
No comments:
Post a Comment