Saturday, June 15, 2013

நீ உணர்த்தியது...

கவிதையும் கனவும் மட்டுமே காதல் அல்ல -- என்று

மீண்டும் ஒருமுறை புரிய வைத்தாய்..

உனக்கும் எனக்குமான, நம் நினைவுகளில் மூழ்கிடும் போது,

திடுமென உணர்கிறேன் --- அது வெறும் நினைவு மட்டுமே என்று..

உயிரில்லாத உறவுகளில் உணர்வுக்கு மட்டும் என்ன மதிப்பு ?

விழி திறக்கும் முதல் நொடியில் இருந்து,

ஊரடங்கி, உறக்கம் தேடும் அந்த நொடி வரை

திரும்பும் எங்கெங்கும் உன் பிம்பமே!

முப்பொழுதும் உனக்கென உருகி,

எப்பொழுதும் எனக்கென வாழ மறந்தேன்!!!


No comments:

Post a Comment