Saturday, June 8, 2013

உன்னை எதிர்பார்த்து.....

ஓராயிரம் பேர் என்னை சுற்றி இருந்தாலும் ,

மின்னல் ஒளியை போல் உன் நினைவு என்னை தாக்குகிறது.

அந்த ஒரு நொடியில் ,

இருக்குமிடத்தையும் மறந்து மனம் பறக்க தொடங்குகிறது !

நிலவின் வருகையில் தொடங்கி நீண்ட கதைகள்

சூரிய உதயத்திற்கு பின்னும் முடியாமல் ;

அரைகுறை மனதாய்

அலைபேசிக்கு ஓய்வு கொடுத்து முடிந்த அந்த நாட்கள்;

நினைவலையில் கண நேரத்தில் மோதும் போதெல்லாம்

ஆயிரம் அதிர்வுகள் அடுத்தடுத்து தாக்கும் இதயத்தை ;

சதா என்னை தவிக்க செய்யும் அதே கேள்வியுடன்!!!!

இமைகளின் தவிப்பை அறிந்து ,

இருக்குமிடம் தெரிந்து ,

கண நேரத்தில் தோன்றி கவலை மறக்க செய்த அந்த நொடிகள் ;

நொறுக்கி விடுகின்றன என் கோபத்தை!!

திரும்ப திரும்ப உன் முகம் பார்க்க ,

ஒரு முறையாவது உன் குரல் கேட்க ,

சிறு குழந்தையென அடம்பிடிக்கும் இதயம் ,அதை

சில்லு சில்லாய் உடைத்து விடாதே !

தயவு செய்து எனக்கும் கற்று கொடு,

ஆசையில் துடிக்கும் மனதையும்,

ஆவலில் தவிக்கும் கண்களையும்,

மற்றவர்களுக்கு தெரியாமல் எப்படி மறைப்பது என்று ?

நித்தமும் என் நெஞ்சில் சத்தமாய் கேட்கும் கேள்வியை ,

ஒரே ஒரு முறை உன்னிடம் கேட்கிறேன்,

"எப்போது வருவாய் கோபம் மறந்து,

கொஞ்சும் விழிகளுடன் நெஞ்சை நெகிழச் செய்ய ?”

No comments:

Post a Comment