Saturday, June 8, 2013

சக மனிதனை நேசிப்போம்...

கட்டிட காடுகளுக்கு மத்தியில் கவலை ரேகையுடன் மனிதர்கள்...

கணிணியுடன் கலந்துவிட்ட பொழுதுகள்...

இயந்திர கதியில் உணவு வேளைகள்...

இறுக்கமான உறக்கங்கள்....

காற்றைப் போல் வேகமாய் வாழ்க்கை ஓடிக் கொண்டிருக்கிறது..

திடீரென ஒரு நாள் , திரும்பிப் பார்த்தால் .....

தன்னந்தனியே நான் மட்டும் ,என் உலகத்தில் ....

எப்போதும் எதையோ தேடித்தேடி,

சாதித்திருப்பது இலக்கற்ற வெறுமை மட்டுமே....

தொலைத்து விட்ட நண்பர்கள் ..

இழந்து விட்ட புன்னகை ......

மறந்து விட்ட கருணை...

மரத்துப் போய் விட்ட நேசம்...

ஒரு சிரிப்பில் உதவிட

துளி கண்ணீரில் கலந்திட

ஆறுதல் சொல்லி அணைத்திட..

பெரிதாய் எதுவும் செய்திட வேண்டாம்...

சிறு புன்னகை போதும் ..

சக மனிதனை நேசித்திட.....

வீழ்வது எதுவாகிலும் உலகில்,

வாழ்வது நம் நேசமாகட்டும் பிறர் நெஞ்சில்...

No comments:

Post a Comment